வரிகள்!
எம் வலி துடைக்க புறப்பட்ட வரிகள்…
எம் வேலியாய் நின்று காத்த வரிகள்….
தம் முகம் மறைத்து சென்ற வரிகள்….
எமக்கு ஒரு முகவரி தந்த வரிகள்……
எம் உரிமைக்காய்
எம் இருப்புக்காய்
பகை எதிர்த்து செங்களமாடிய வரிகள் !
மறப்போமா உமை ?? மறுப்போமா உமை??
மறந்தால் தமிழ் வழக்கில் இல்லை!
மறுத்தால் அவர் ஈழத்தமிழர் இல்லை!
எம்மினம் சீரழிக்கப்படும் போதெல்லாம்
எம் நெஞ்சை வருடும் வரிகளே !
உம் வரிக்கோலமின்றி
நம் சமூகம் அலங்கோலமானதே !!
கமலச் செல்வி.