பொறி பறக்கும் சிறு தீப் பொறி நாளை வழி வகுக்கும்!
அன்று விடுதலை சமரால்
ஈழமெங்கும் மூண்டியெழுந்த
விடுதலை தீ ………
இன்று காலச்சக்கரத்தால் ,
துரோக குரோதத்தால் ,
எங்கும் சாம்பல் காடாய்
சாம்பலிடை சிறு தீப்பொறியாய்
புகைகின்றது சில உள்ளங்கள் இன்று …
போர்களம் கண்ட வேதனைகளை,
போர்களம் ஈன்ற சாதனைகளை,
செங்களமாடி செங்குருதி தோய்ந்த
வரியுடை மறவர்களை,
விடுதலைக்கு வித்தான முத்துக்களை,
விடுதலை முத்துக்களைத் கோர்த்து
ஈழத்தாய்க்கு மணி மகுடம் சூட்ட
துடித்த தங்க தலை மகனை,
குண்டு மழையில் கொத்து கொத்தாய்
கரைந்து போன உறவுகளை ,
எண்ணி எண்ணி
சொல்லி அழ வார்ததையின்றி தவிக்கின்றது..
உள்ளுக்குள் எரியும் சிறு தீப்பொறிகள்
ஆயிரம் ஆயிரம்…..
அத்தனையும் ஒரு பொறியாய் ஒன்றே எரிந்தால்
நிச்சயம் விடிவு வரும்!
விடுதலை தீ மீண்டும் மூண்டெழும்!
உணர்வுகளின் எழுச்சியே விடியல்!
கமலச்செல்வி