பெரு நெருப்பின் முன்னாலே புலிகள் ஆவோம்.
நினைவுத் தூபியை
அழித்து…..கனவை
புதுப்பிக்க வைத்துவிட்டனர்
புத்தனின் வாரிசுகள்…..
இரவோடு இரவாக
இடித்துத் தள்ளிவிட்டு…தமிழர்
உணர்வோடு விளையாடுகிறது
சிங்கள இனவாதம்…..
இரண்டு லட்சம் மக்களைக்
கொன்று குவித்துவிட்டு
இப்போ
அஞ்சலிப்பதற்கும்
அடக்குமுறை….
வரலாற்றை மறந்துவிட்டு
இனவெறியின்
அதிகாரத் திமிரில் ஆடுகிறது
இனவாத அரசு……..
முள்ளிவாய்க்காலோடு…தமிழர்
வீரம் முடிந்துவிட்டது
என நினைத்தே
எல்லைகளற்ற அடக்குமுறையும்
இழி செயல்களையும்
எமது இனத்தின்மீது
கட்டவிழ்த்து விட்டுள்ளது
காடையர்களின் அரசு
வலிநிறைந்த வாழ்வோடு
குமுறிக் கொண்டிருக்கும்..எமது
இனத்தின் மீது
சிங்களம் சீண்டிக்கொண்டிருப்பதை
பொறுத்துக் கொண்டிருக்காது
அடுத்த தலைமுறை……
உறவுகளை இழந்த
துயரோடும்….நெருப்பாய்
கனன்று கொண்டிருக்கும்
வலியோடும்
கனவுகளை சுமந்து வாழும்
இனத்தின் உணர்வோடு
விளையாடினால்
புரட்சி வெடிப்பதை ….இனி
புத்தனின் வாரிசுகளால்
தடுக்கமுடியாது…….
இனவாத சிங்களத்துக்கு
துணைபோகின்ற
இனத்துரோகிகளான
இரண்டு
பரதேசிகளும்……இன
உணர்வு கொஞ்சமும் அற்று
பிணமாக வாழும்
பொறுக்கிகள்……..
தமிழினத்தை அழிக்கத்
துடிக்கும்
கொலைகாரர்களுடன்
கூட்டுச் சேர்ந்து
விலை போகும் கோடரிக்
காம்புகளே
வலியுணரா வாழ்வு
தொடர்ந்து நிலைக்காது……..
பெரு நெருப்பின் முன்னாலே புலிகள் ஆவோம்
திருவுடல் வெடித்தேனும் ஈழம் காண்போம்
ஆவூர்குமரன்
தமிழீழம்