சேற்றில் முளைத்த சிறு ஆம்பல் ராஜபக்ச. #go home gotta #
ஆற்றில் முளைத்திருக்கும்
செந்தாமரை என்று எண்ணி
சேற்றில் இருந்து ஆம்பலை
எடுத்து அரசாள வைத்தது சிங்களம்
ஆழ வேரோடி அருகாய்
அமர்ந்திருந்த அல்லி தனை
பறிக்க வந்தது அல்லி மட்டும் அன்றி
வேரும் வேரோடி மண்ணில் விளைந்த
சுற்றமும் தான்
நாற்றம் பிடித்து இருந்த
நடை பாதை பூத்து இருந்த
வாடை தனை நீக்கி
வாசனை மிகப்பூசி
வரவேற்பு கம்பளத்தில்…
ஏற்றம் வரும் என்றும்
தோற்றம் மாறி அதன்
தொன்மை துலங்கும் என்றும்
மாற்றம் வந்து எங்கள்
மடியும் நிறையும் என்றும்
நம்பி நாள் நகர எண்ணி இருந்தது
வாசனைஅற்று ஆற்றின்
சகதிக்குள் வாழ்ந்து இருந்த
யோசனை மறந்து ஆசனம் ஏறிய பின்
ஆழ வேரோடி அரசாள வந்த ஆம்பல்
சூழத் தன் சுற்றம் சுற்றி வர மலர்ந்தது
தாய் மாமன் ,தமையன் ,தம்பி மகன்
தங்கைக்கு பெண் கொடுத்தான்
தம்பி பெண் எடுத்தோன் என தரமற்ற ஒரு கூட்டம் தரணியாள தொடங்கியது
ஒருவர் பின் ஒருவராய்
உலகம் தனை சுற்றி உயரத்தின் உயரமாய் ஆனது ஓர் ஆம்பலினம்
நாட்டை வழி நடத்தும் பாட்டை மறந்து விட்டு
நக்கி பிழைத்திருக்கும் நான்கு பேர் சேர்த்து
வீட்டை விளை நிலத்தை தோட்டம் துரவு என்று சேர்த்துக் குவித்தது
வீசிய காற்று விதி வழி மாறி விட
பூசிய வாசனை இதழ் விட்டு போய் முடிய
புரிந்தது ஆம்பல் என்று
நாசம் நாடு என்றும் தேசம் வேண்டும் என்றும் நடுத்தெருவில் சிங்களம் நடனம் ஆடியது
நரியை எடுத்தி வந்து நன்கு குளிப்பாட்டி
நடு வீட்டில் விட்டு விட்டு சிங்கம் என சொன்ன சிங்களத்தின் சிறு மூளை
இயங்கத் தொடங்கியது
ஆம்பலை அள்ளி வந்து அரசேற வைத்த பின்னர் சாம்பலே மிச்சம் என்று சன்னதம் தொடங்கியது .
கோ கோத்தா ஹோம் என்றால்
கொடுத்த விலை என்னாவது ?
கோடி பணம் என்னாவது ?
மருந்துக்கு வழி இன்றி முடங்கி கிடந்தவனை விருந்துக்கு அழைத்து வந்து வீணாகி போனீரே
மோட்டுச் சிங்களவர் என தமிழர் அழைப்பதை கேட்டு கேட்டு சில வேளை சினம் கொள்ளும் .
ஆற்றுப்படுக்கை ஆம்பலை அரசாள வைத்த புத்தி மோட்டு சிங்களமே மோட்டு சிங்களமே…..
…..கவிப்புயல் சரண்….