செந்தாமரை என்று எண்ணி சேற்றில் இருந்து ஆம்பலை எடுத்து அரசாள வைத்தது சிங்களம்.

In தாயக கவிதைகள்

சேற்றில் முளைத்த சிறு ஆம்பல் ராஜபக்ச. #go home gotta #

ஆற்றில் முளைத்திருக்கும்
செந்தாமரை என்று எண்ணி
சேற்றில் இருந்து ஆம்பலை
எடுத்து அரசாள வைத்தது சிங்களம்

ஆழ வேரோடி அருகாய்
அமர்ந்திருந்த அல்லி தனை
பறிக்க வந்தது அல்லி மட்டும் அன்றி
வேரும் வேரோடி மண்ணில் விளைந்த
சுற்றமும் தான்

நாற்றம் பிடித்து இருந்த
நடை பாதை பூத்து இருந்த
வாடை தனை நீக்கி
வாசனை மிகப்பூசி
வரவேற்பு கம்பளத்தில்…

ஏற்றம் வரும் என்றும்
தோற்றம் மாறி அதன்
தொன்மை துலங்கும் என்றும்
மாற்றம் வந்து எங்கள்
மடியும் நிறையும் என்றும்
நம்பி நாள் நகர எண்ணி இருந்தது

வாசனைஅற்று ஆற்றின்
சகதிக்குள் வாழ்ந்து இருந்த
யோசனை மறந்து ஆசனம் ஏறிய பின்
ஆழ வேரோடி அரசாள வந்த ஆம்பல்
சூழத் தன் சுற்றம் சுற்றி வர மலர்ந்தது

தாய் மாமன் ,தமையன் ,தம்பி மகன்
தங்கைக்கு பெண் கொடுத்தான்
தம்பி பெண் எடுத்தோன் என தரமற்ற ஒரு கூட்டம் தரணியாள தொடங்கியது

ஒருவர் பின் ஒருவராய்
உலகம் தனை சுற்றி உயரத்தின் உயரமாய் ஆனது ஓர் ஆம்பலினம்
நாட்டை வழி நடத்தும் பாட்டை மறந்து விட்டு

நக்கி பிழைத்திருக்கும் நான்கு பேர் சேர்த்து
வீட்டை விளை நிலத்தை தோட்டம் துரவு என்று சேர்த்துக் குவித்தது

வீசிய காற்று விதி வழி மாறி விட
பூசிய வாசனை இதழ் விட்டு போய் முடிய
புரிந்தது ஆம்பல் என்று
நாசம் நாடு என்றும் தேசம் வேண்டும் என்றும் நடுத்தெருவில் சிங்களம் நடனம் ஆடியது

நரியை எடுத்தி வந்து நன்கு குளிப்பாட்டி
நடு வீட்டில் விட்டு விட்டு சிங்கம் என சொன்ன சிங்களத்தின் சிறு மூளை
இயங்கத் தொடங்கியது

ஆம்பலை அள்ளி வந்து அரசேற வைத்த பின்னர் சாம்பலே மிச்சம் என்று சன்னதம் தொடங்கியது .

கோ கோத்தா ஹோம் என்றால்
கொடுத்த விலை என்னாவது ?
கோடி பணம் என்னாவது ?
மருந்துக்கு வழி இன்றி முடங்கி கிடந்தவனை விருந்துக்கு அழைத்து வந்து வீணாகி போனீரே

மோட்டுச் சிங்களவர் என தமிழர் அழைப்பதை கேட்டு கேட்டு சில வேளை சினம் கொள்ளும் .
ஆற்றுப்படுக்கை ஆம்பலை அரசாள வைத்த புத்தி மோட்டு சிங்களமே மோட்டு சிங்களமே…..

…..கவிப்புயல் சரண்….

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.