வேழத்தை ஒப்ப தலைவன்……!
இருப்பதால் எதுவும் பிழைத்ததில்லை
இல்லையேல் எதுவும் மறப்பதில்லை
உள்ளதை எண்ணியே காலம் தாழ்த்த
உரிமை தான் இழப்பது எங்கள் மண்ணில்
வல்ல எம் தலைவன் வளர்த்த கொள்கை
வரை முறை மீறி சென்றதில்லை
எல்லைகள் நீளும் போரில் எங்கள் எண்ணமும் குறைந்து போனதில்லை
தாயுக்கும் மேலாக தமிழைக் காத்தான்
தமிழுக்கும் சேயினை தாரை வார்த்தான்
வாழ்வுக்கும் வயலுக்கும் வலிமை சேர்த்தான்
வார்த்தைக்குள் அடங்காத வைரம் ஆனான்
ஈழத்தில் பெரும் படை ஆக்கி கொண்டான்
ஆழத்தில் தமிழ் வலி கூட்டிக் கொண்டான்
வேழத்தை ஒத்தபோல் வேகம் கொண்டான்
காலத்தின் கோலத்தில் களம் பிரிந்தான்
இருப்பதால் பெருமையில் எங்கள் எல்லை
இல்லையேல் இறைவன் அதுவே உண்மை
வருந்தியே போகாது எங்கள் மனம்
வரலாற்றை மாற்றுவோம் உங்கள் இனம்..
……கவிப்புயல் சரண்……