தேடி வந்த பறவைகள்…..!
எத்திக்கும் ஏரோடும்
பார்ந்த இடாமல்லாம் நீரோடும்,
ஆம். நாங்கள் துள்ளி குதித்த பூமி
கண்ணகைதான் எங்கள் சாமி….!
பார் போற்றும் மூத்த குடி
அவளே எங்கள் தொப்புள் கொடி
ஒரு நாள் புத்தன் மௌன மானான்
எத்தனோ எதிர்க்கலானான்
மண்னோடு மண்ணானோம்
மனமெல்லாம் புண்ணானோம் …..!
தென்னங் கீற்றோடும் தென்றல் காற்றோடும்,
வாழ்ந்த வாழ்கை வசமாகுமா…?
இல்லை இனி விசமாகுமா …?
எங்கள் குருதி எம்மண்ணை உறுதியாக்கும்
அதுவே அவர்களின் வாழ்வை இறுதியாக்கும்
நம்பிகையுடனே பறக்க லானோம்
நாளை எங்கள் விடிவு காண்போம் ..!
ஈழத்து பறவைகள்
ஆம் நாங்கள் ஈழத்து பறவைகள் .
இங்கு ஈரம் தேடி வந்த பறவைகள்…!
நன்றி
செந்தில் பிரபு சென்னியப்பன்
கோயம்புத்தூர்
தமிழ் நாடு