முகத்திரை கிழியும் ஓர் நாள்..
ஈழத்தையே குழிதோண்டி புதைத்ததும் நீயல்லவா,
உனக்கு இனத்துரோகம் ஒன்றும் புதிதில்லையே,
தஞ்சம் என வந்தவர்களை கொன்றதும் நீயல்லவா,
அகிம்சை மொழி பேசியே திலீபனையும் கொன்றாயே,
ஈழம் காப்பதாய் பொய்யுரையும் உரைத்தாயே,
இலங்கையில் கால் பதித்து நீ விலையும் போனாயே,
சதிவலையும் புரிந்தே அன்று குரோதமும் கொண்டாயே,
தலைவனையும் சிறைப்பிடிக்க நீ வழி வகுத்தாயே,
காடுவழி சென்று கண்ணிவெடியில் காலையும் இழந்தயே,
வீறுகொண்ட வேங்கையிடம் ஈழத்தில் தோற்றும் போனாயே,
தானைத்தலைவனிடம் மண்டியிட்டும் அடங்கி வீழ்ந்தாயே,
குதிகால் அடிபட புறமுதுகிட்டு ஈழம்விட்டு ஓடிச்சென்றாயே,
வஞ்சம் கொண்டு இன்று நீ ஈழம் வந்து நாசமும் புரிந்தாயே,
முள்ளிவாய்க்கால் வந்து பிஞ்சுகளையும் கொன்றாயே,
பதுங்கு குழியில் இருந்தோரை மூடியதும் நீயல்லவா,
சிங்களத்துடன் கூட்டு சேர்ந்து நம் நாட்டையும் சிதைத்தாயே,
வதைமுகாமில் உறவுகளை அடைத்தோரும் நீங்களே,
எமது மண்ணை சல்லடையாக்கியவனும் நீதானே,
கொல்லவா இல்லை இல்லை கொல்லும் எண்ணமா உனக்கு,
வானை தொட்டதாக வான சாஸ்திரமும் படிக்கிறாய்,
அருகில் இருந்துகொண்டே தூரத்தே விலகியும் விட்டாய்,
இனியும் மார்தட்டாதே நீயே ஆசியாவின் வல்லரசு என்று,
கொல்வது ஒன்றும் புதிதல்லவே உமக்கு வல்லரசே,
உங்கள் அரசியல் நாடகத்தில் என்றுமே இதுவல்லவா மூச்சு,
உங்கள் மூச்சை இன்னும் வீச்சாக்கவா தேசம் வந்தாய்,
கண்முன்னே உறவுகள் உயிர்களையும் பறித்தீர்களே,
இனியும் மார்தட்டாதே உன்னால் எதுவும் முடியும் என்று,
மறுபடியும் ஓர்நாள் தோற்றுப்போய் விண்ணுலகம் செல்வாய்,
வரிகள்,
ஈழம் வாகீசன்.