வேலாயுத வேலவன்…..!
சங்கத்தையும் வென்று தரணியை
ஆளவந்த மறத்தமிழன்!
முத்தமிழை மீளவும் மீட்டெடுத்த
தமிழீழத்தின் பெருந்தலைவன்!
வல்வை மண்ணில் உதித்துவந்த
ஈழத்து சூரியவேந்தன்!
மண்ணில் உதித்து ஆழ்கடலையும்
விண்ணையும் ஆண்ட பெருமகன்!
அடிமைப்படுத்தி அடக்க வந்தவர்களை
புறமுதுகிட்டு ஓட வைத்த தேசமகன்!
தமிழீழம் ஒன்று மட்டுமே தமிழினத்தின்
தீர்வு என்றுரைத்த தமிழ்மகன்!
பண்டாரவன்னியன் வீரத்தை மீளவும்
தந்த வரலாற்றுநாயகன்!
ஈழதேசம் கடந்தும் தமிழீழதேசத்தை
உலகெங்கும் நிறுவிய உலகமகன்!
அண்டமெங்கும் அனைத்தையும் அறிந்த
கணித்திட்ட காலத்திருமகன்!
பெண்ணியத்தை அடிமை விலங்குடைத்து
போராட வைத்த கண்ணியவான்!
முக்காலமும் உணர்ந்து காலத்தை கணித்த கலியுகத்தின் கரிகாலன்!
அன்னையாக தந்தையா அனைவருமாக
தோழ் கொடுத்த தாயுமானவர்!
தமிழன் வீரத்தை உலகம் எங்கும்
விதைத்திட்ட வீரமகன்!
வேலவனின் வீரத்தை தமிழீழத்தில்
நிறுத்திய வேலயுதவேலன்!
இராவண வேந்தன் வழியே அவதரித்த
தமிழ் தேசத்தின் புலிவீரன்!
ஐம்பெரும் காப்பியமும் கண்டிராத
எங்கள் தேசத்தின் தலைவன்!
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.