தமிழீழத்தின் முதற் பெண் தளபதி…!
30ஆம் வருட மேஜர் சோதியா அக்கா நினைவாக எழுதிய சிறப்புக்கவிதை
தேசத்தலைவன் வழியில் வந்த ஈழத்து வரலாற்றுப் புதல்வி இவள்/
களமாட வந்த வீரத்தமிழிச்சிகளை காத்திட்ட அன்னையுமிவளே/
மணலாற்று காடுகளில் வீரப் பெண்களை
வளர்திட்ட வீரமாதேவியும் இவள்/
விடுதலைப் பாசறையில் வீரத்தை ஊட்டிய
வீரத்தின் விளைநிலம் இவளே/
அடர் காட்டில் விடுதலைக்கு விலங்குடைத்த வீரச்சிட்டும் இவள்/
அக்கினிக் குஞ்சுகளை முதலில் வழிநடத்திய முதற் தளபதியும் இவளே/
நெஞ்சு புடைக்க விறைத்து நின்று வீர கட்டளை வழங்கும் வேங்கையும் இவள்/
இளமைக்காலத்து நினைவை அள்ளி வழங்கும் தோழியும் இவளே/
செல்லமாக இருந்தாலும் கண்டித்து வழிநடத்தும் ஆசானும் இவள்/
ஈழத்துப்பெண்களை புரட்ச்சிப் பாதைக்கு செப்பனிட்டவளும் இவளே/
அண்ணனோடு துணைநின்று தமிழுக்கு சேவகம் புரிந்தவளும் இவள்/
திக்கற்ற கானகத்தில் வீர சிறுத்தைகளின் திசைகாட்டியும் இவளே/
ஈழத்துப் பெண்களை விழுந்து விழுந்து கவனித்த “நைற்றிங்கேலும்” இவள்/
ஈழத்து விடுதலைக்கு உழைத்து உழைத்தே தேய்ந்தவளும் இவளே/
அடைபட்டு அடங்கி கிடந்த பெண்களை வீரமாக்கிய வேலைநாச்சியாரும் இவள்/
குற்றம் செய்த குஞ்சுகளை குட்டியே திருத்திய கைகளும் இவளே/
ஆரம்ப நாட்களில் கடின பயிற்சி வேளையிலும் ஆறுதலும் இவள்/
துன்ப வேளைகளிலும் இன்பத்தை தந்த புன்னகை அரசியும் இவளே/
நோயுற்ற வேளைகளிலும் எம்மைக்காத்த மருத்துவச்சியும் இவள்/
இறுதியில் நோய்கொண்டுபோக வீரச்சாவின் துயர் தந்தவளும் இவளே/
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.
11/01/2020.