பட்டமரம் மெல்ல பசுமை உருக்கொண்டு பாரில் முளைத்து நிற்கும் ...!
தோற்றம் தொலைத்து நின்ற
தமிழினத்தின் ஆற்றல் இடித்துரைத்த
அறிவோன்
கூற்றம் பகைக்கென்று
தோற்றம் காட்டி நின்ற திறலோன்
நாற்றம் பிடித்திருந்த நம் தமிழர்
சேற்றை கழுவ வந்த செழுமறவன்
ஏற்றம் ஓங்க என்று நேற்றுப்
போர் புரிந்த நெடுமாறன்
கூற்றம் அழித்த நமை தேற்றிப்
பிடித்து வந்த திருமாறன்
ஈழத்திருநாட்டின் இன்னல்
களைய வந்த இரும்பொறை
வாழத் துடித்த இன வல்லமை
என்று வந்த வரைமுறை
அழுது முடித்த தமிழ் அடிமை
வரலாற்றில் ஆண்மை பொங்க
நின்ற அரசன்
தொழுது விழுந்த எங்கள்
தோல்வி நிலை கண்டு
பொழுது விடிய வந்த முரசம்
சொல்லுக்கு முன் செயல் என்று வந்து
தொல்லை தவிர்த்து விட்ட தேர்க்கால் .
தாகம் மிகை ஓங்கத் துடித்த தமிழ் இனத்தின் தாகம் தீர்க்க வந்த நீர் மோர்
வெல்லும் ஈழத்தில் வேங்கைப் படை கொண்ட விறலோன்..
மெல்லப் பகை கொல்லும் உத்தி கற்று வந்து வெல்லப் போகும் எம் தலையோன்
ஒற்றைத் தலைவன் அவன் ஓங்கும் திசை எல்லாம் கொற்றத்தேவி கொலுவிருப்பாள் பார்
சீற்றம் மிகை கொண்டு சீறு புலியாகி
செங்களம் அதிர அவன் தோற்றம் தெரியும் பார் .
பட்டமரம் மெல்ல பசுமை உருக்கொண்டு பாரில் முளைத்து நிற்கும்
விட்ட இடம் எல்லாம் தொட்டுக் கரிகாலன்
இட்ட கொடி பறக்கும்
.....கவிப்புயல் சரண்....
Share this: