கிட்டண்ணா…
கிட்டண்ணா நீ எங்கள் முத்தண்ணா,
முது பெரும் தளபதியும் நீங்களண்ணா,
பெயர் கேட்டால் படை நடுங்குமண்ணா,
குரல் கேட்டால் புலிப்படை சீறுமண்ணா,
பகைவனுக்கும் உணவளித்தவரும் நீங்களே,
சிங்களத்தை கோட்டைக்குள் முடக்கியவரும் நீங்களே,
எம் தேசத் தலைவன் சுமைகளை தாங்கியவரும் நீங்களே,
பல இடர்களில் இருந்து காத்திட்ட தளபதியும் நீங்களே,
கிட்டம்மாள் தந்த பாசத்தை மொத்தமாய் தந்தீரே ஈழத்துக்கு,
அன்னையையும் விஞ்சிவிட்டீர் அண்ணன் மேல் பாசம் வைத்து,
ஆரம்ப சமரே வெற்றிச்சமராக வரலாற்றில் தடம் பதித்து,
சமாதானப் பேச்சுக்களிலும் முதற்புலியாய் முன்னே துணிந்து,
விடுதலைக்கான பணியை தீவிரமாக தமிழகத்திலும் முன்னெடுத்து,
இறுதிக்கணத்தில் தியாகதீபம் காண துடித்த தளபதியே,
தனி தமிழீழ கனவுடனே தோழர்களோடு வந்தீரே,
மொத்த சுமைகளையும் ஒற்றையாகவே சுமந்த பெரு வீரரே,
கொண்ட கொள்கை வழி வங்கக்கடலிலே காவியமாக கரைந்தீரே,
மாபெரும் சரித்திரமாக தேசத்து விடுதலைக்கு விதையானீரே,…
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.