அகவைநாள் வாழ்த்துக்கள்…தீபண்ணா.
தேசத்தலைவன் தூக்கி வளர்த்த தளபதியே/
சமர்க்களம் வழிவந்த ஈழத்து சரித்திரமே/
முதல் படையணின் விடுதலைப்புலி மாவீரனே/
திட்டமிட்டு கட்டளை வழங்கும் வேங்கையே/
தோளோடு தோள் கொடுக்கும் ஆளுமையே/
ஓயாத அலையின் வெற்றியின் பெரு மூச்சே/
புளியங்குளத்தில் புரட்சி புரிந்த புலிவீரமே/
சிங்களத்தை திண்டாட வைத்த வீர புரட்சியே/
பூநகரியில் புதுமை புரிந்த ஈழத்து பேரொளியே/
அக்கினியோடு வந்த பகையை அழித்தவனே/
தீச்சுவாலையின் தீரம் மிகுந்த போர் வீரனே/
ஆனையிறவின் வெற்றியின் பெரிய உயர்ச்சியே/
பகைவனை சுட்டெரிக்கும் வானத்து சூரியனே/
அனைவர் உள்ளமும் நிறைந்த புரட்சி தளபதியே/
வீறுகொண்டு களமாடும் தலைவனின் வரிப்புலியே/
ஓயாது எதிரியை ஓட ஓட விர்ட்டிய சேனாபதியே/
துவழாது எதிர்த்து வெஞ்சமர் புரிந்தவீரனே/
தலை தாழாது நிமிர்ந்து போரிட்ட கள வீரமே/
தன்னையே தந்துவிட்ட சேனைத் தளபதியே/
பிரியாது சென்றுவிட்ட பிரிகேடிஜர் தீபண்ணா.
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.