துணிந்து நின்று போராடி
துயிலுமில்லம் போகவேண்டும்….”
இதயம் கனக்கும் சுமையோடு
இரக்கமிலா இரவுப்பொழுதில்
உழன்றுகொண்டிருந்தாள்
ஈழத்துப்பெண்ணொருத்தி….
மறக்க முடியா நினைவுகள்
மாறாத மனவலிகள்,
துறக்க நினைத்தும்
துரத்துகின்ற துயரங்கள்…
தனிமை மரமாய்
தவித்துப்போனாள்..
இருந்தும் இனிமை சேர்க்க
இரண்டு குஞ்சுகள்
அவள் இறகுக்குள்,
அந்த இரவுவேளையில்
உறங்கிக்கிடந்தனர்,
உறக்கமின்றித் தவித்தவள்
கனத்த நெஞ்சினளாய்
நினைத்துக்கொண்டாள் மறத்தி(தீ)
‘யாரேனும் தடுத்தாலும்,
விடிந்ததும் விளக்கேற்ற
‘துணிந்து நின்றுபோராடி
துயிலுமில்லம் போகவேண்டும்’,
கார்த்திகைக்காற்று
சிலிர்த்தபடி வீசியது…
சுவற்றில் நிமிர்ந்து நின்ற
நிழல்படத்தில்
அவள் புனைந்த(பூ)மாலைக்குள்
புன்னகைத்தபடி நின்றான்,
தேசத்தின் காவலனாய்
எல்லைப்படை ‘மாவீரன்’….
-காந்தள்-
25/11/2016