இழந்த வாழ்க்கை காலையில் கதை சொல்லும் பாட்டி மாலையில் மண்ணில் விதையாய் எறிய பட்டது நினைவுகளில்.....! வீனாய் போகும் வியர்வை வீரமாய் ஓடும் குருதியாய் மாறியதே மண்ணில் தேனாய் இனித்த குரல்கள் தேவதையாய் உதித்து தெய்வமாய் எம்முடன் வாழ்ந்த அன்னையை அறுத்தார்களே ஊமையாகி விட்டோமே அன்று......! சிரித்து பேசி சிறகடித்து வாழும் நாங்கள் நாணய குற்றிகளாய் மண்ணில் புதைந்தோமே ஆசைகளை அழித்தோம் பெரும் போர் ஒன்றை நடத்தி முடித்தோம்......! சு.லக்ஸன்