தமிழர் தலைவனானவன் எங்கள் தாயுமானவன்….!
எத்தனை தடைகள் தாண்டி
எத்தனை சுமைகளை சுமந்து
எத்தனை காயங்கள் தாங்கி
எத்தனை நினைவுகளில் தங்கி
எத்தனை சவால்களை எதிர்கொண்டு
எத்தனை சோதனைகளை கடந்து
பகலிரவு பரபட்சமில்லாது உழைத்து
எத்தனை கனவுகள் கொண்டு
எத்தனை களப்பலி கண்டு
எத்தனை இலட்சிய பற்றுகொண்டு
கடைமையில் கண்ணாக நின்று
உரிமையில் உறவாக உறவாடி
பெருமை பேசுவதை துறந்து
உரிமை பேசுவதில் முனைந்து
வான் படைவரை வளர்ந்து
வானுயர்ந்து நின்றான்
தமிழர் வீரத்தை வானத்திலேற்றியும் கடத்தினான்..
தமிழர் தலைவனானவன்.
எங்கள் தாயுமானவன்….!
” தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
பிரபாசெழியன்.