வல்வை சூடிய நாதன்!
தமிழை காக்க வல்வை
சூடிய நாதன்
தமிழை செதுக்கி
உளியாய் நின்றவன்!
நவீன யுகத்தில் தமிழரசனாய் உயர்ந்தவன்
இவன் பாதை எங்கிலும் துரோகம்
சூறாவளியாய் சுழன்றாலும் – இவன் மிடுக்கு
குன்றியதில்லை!
காலத்தை வென்ற காலன்
சரித்திரம் படைத்திட்ட சூரன்
பகை சிரம் உடைத்து சிகரம்
தொட்டவன்!
தடை பல வந்தாலும்
படை பல தடுத்தாலும்
மடை திறந்த வெள்ளம் போல்
நடை போட்டவன்
ஈழ சாம்ராச்சியத்தை சமைத்தவன்!
காரியம் வென்று
காவியம் படைத்தவன் !
போர்நயம் கொண்டு புரட்சியை விதைத்து
விடுதலை குறியீடாய் நிற்பவன்!
புவியாளப் பிறந்தவன் நீயே
புது நீதி படைப்பாய்த் தீயே
புரவி ஏறிய வீரன் போலே – நீ
புரட்சி செய்ய வந்தவன் தானே
இராவணன் வழி நடந்து
வியூகம் வகுத்து
விண்ணை வெல்வாய்
மண்ணை ஆள்வாய்
அதுவரை….!
ஈழம் புகழ் மாறன்