அளவீடுகளில் அடங்கா வீரியம்!
எதிர்த்து நின்றான் ஒருவன்
பேரினவாதம் பின்வாங்கியது!
அச்சம்
அவனை கண்டு
ஐயப்பட்து!
அவன் பார்வையில்…
பற்றி எரிந்தது
எதிரிகள் கோட்டை!
உயர்ந்த எண்ணம்
கொண்டு நின்றான்
உலகம் அவனை
அண்ணாந்து பார்த்தது!
வியூகம்
வகுத்து நின்றது
அவன் வீரம்!
இல்லை என்பதும் அவன்தான்
இருக்கு என்பதும் அவன்தான்!
ஆதிமூலமாகிய அருட்பெருஞ்சோதியாய்
அகத்தில் உறைந்து நின்றான் தலைவனாய்!
அளவீடுகளில் அடங்கா
வீரியம் கொண்டவனாய்
உலக அரங்கில் உயர்ந்து நின்றான்!.
ஈழம் புகழ் மாறன்