எங்கள் கரிகாலன் பிறந்த தேசம் போற்றி வணங்குவோம்….!
இது கார்த்திகை மாதம்
எங்கள் கரிகாலன் பிறந்த தேசம்
போற்றி வணங்குவோம்
மாவீரர் பாதம் தொட்டு
ஈழம் எமதென்று ..
நெஞ்சினில் நெருப்பேந்தி
நீறாகிப் போனவரே
நெஞ்சுருகிப் பனிந்தும்
பாதங்களை வணங்கிடும் நாளிது.
தாயின் துயர் துடைத்து
தாயகம் காத்திரே உம்மை
தேடி விழிநீர் சொரிந்து
வாடுகின்றோம் பாரிர்..
கல்லறையில் உறங்கும்
கண்மணிகளே உங்கள்
கனவுகள் சுமந்தே
செல்கின்றோம் பாருங்கள்
கார்த்திகை இருபத்தேழு
தீபம் ஏற்றித் தொழுதிட
ஏங்கிக் கிடக்கின்றோம் நாங்கள்
எங்கே உங்கள் விழிகளை திறந்து பாருங்கள்..
ஈழவன் தாசன்
ஈழம் ..