ஈழத்து சூரியனே…!
வானத்து சூரியனும் தாழிறங்கி
உன்னை வாழ்த்த ஈழம் வரும்
உன்னொளி கண்ட கதிரவனும்
நாணம் கொண்டு ஒளிந்துவிடும்
தமிழ் கொண்டு கவி வடிக்க வடிக்க
தமிழ் கூட அழகாகும் உன்னால் வானத்து
தேவரெல்லாம் உனக்காக வாழ்த்துரைப்பர்
வாழ்க வாழ்கவென தமிழீழம்
உன் வரவால் புன்சிரிக்கும்
எம் சிரிப்பும் கூடவே சத்தமிடும்
தமிழரெல்லாம் தலைவன் வரவுகண்டு
அலையாக திரண்டு வந்து கரம்சேர்வர் வள்ளலே,..
ஈழத்து காவலனே பிரபாகரா வரம் தருவாயோ ஈழம் வந்து குறைதீர!
எழுத்தாக்கம், ஈழம் வாகீசன்.