எமக்கு எப்போ சுததந்திரம்…
சிங்களம் வரும் முன்
செந்தமிழ் வளர்த்ததோமே
வெ ள் ளையன் செய்த சதியால்
நாம் வாழ்விழந்து நிற்க்கிறறோ ம்
நிர்க்கதியாய்
இழந்த வாழ்வை மீட்டெ டுக்க
ஏந்தினோம் ஆயுதம்
அதனால் அடிப்பதும் அடிவாங்குவதும்
நம் வாழ்வாகிப் போனது
இரத்தமும் கண்ணீரும்
நம் வாழ்வின்
சொத்துக்கள் ஆனதால்
சொந்த மண்ணிலே
இன்று ஏதிலியாய் நிற்க்கிறோ ம்
அணைக்க எவருமின்றி
சுதந்திரம் கிடைத்துவிட்டதாக
நம் வாழ்வை சிதைத்துவிட்டு
எக்காளமிடுகிறது
குள்ளநரிக் கூட்டம்
நம் இனத்தை அழித்துத்துக் கொ ண்டு
இதுதான் தீர்வென
கூச்சலிடுகிறது இனவெறிபிடித்த
காடையர் கூட்டம்
உண்மையில் சுகந்திரம் கிடைத்தது எமக்கல்ல
பெற்றதாயை விற்று
தம் வயிறு வளர்க்கும்
ஈனப் பிறவிகளுக்கே.
தொகுப்பு : நாகதேவன் தமிழீழம்