பார்வதியார்கள் பெற்றெடுத்த கரன்கள்

In சிறப்பு கட்டுரைகள்

பார்வதியார்கள் பெற்றெடுத்த கரன்கள்!

தமிழின சரித்திர சுவடுகளில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன. அதேபோன்று தமிழின வரலாறுகளை எடுத்துக்கொண்டால் அணைத்து வரலாற்று சுவடுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டுள்ளதை ஆளமாக ஆராய்ந்து பார்த்தால் நன்கு தெரியும்.

1803ஆம் ஆண்டு காக்கை வன்னியனால் மாவீரன் பண்டார வன்னியன் காட்டி குடுக்கப்பட்டபோது காக்கை வன்னியனை பார்த்து
“துரோகியே என்னை உன் துரோக குணத்தால் வீழ்த்தியிருக்கலாம் ஆனால் தோற்றுப்போக மாட்டேன், எனக்கு பிறகு இந்த மண்ணில் ஒரு மாவீரன் பிறப்பான் அவனின் நாமம் ஒன்றே போதுமானது துரோகிகளையும் எதிரிகளையும் பயமுறுத்தும் சிதறடிக்கும்” என்றான் மாவீரன் பண்டார வன்னியன்.

ஆம் அதேபோன்றுதான் 1954ஆம் ஆண்டு ஆரம்ப பகுதியில் சிங்கள பௌத்தத்தின் நயவஞ்சக சதியால் அநுராதபுர மண்ணில் வீழ்த்தப்பட்ட எல்லாள மா மன்னனின் கல்லறை முன்றலில் பார்வதி எனும் தாயின் கருவறையில், சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்பட்டு கிடந்த தமிழனின் அடிமை விலங்குகளை உடைக்க அன்று ஒரு நாள் ஆறுபடை வீடுகளை கட்டியமைத்து எதிரிபடைகளோடு போரிட்ட பார்வதியம்மையின் மகனான முருகன் எனும் நாமம் கொண்ட பிரபாகரன் எனும் கரு உருவாகியது.

அன்று குறிஞ்சி நில மன்னனாக இருந்த முருகப்பெருமான் எதிரி படைகளோடு போர் புரிந்து வெற்றியீட்டிய பின்னர் தனது படைகளிடம் இவ்வாறு கூறுகின்றார்.
“இந்த இனம் வருங்காலங்களில் தமக்குள்ளே மோதிக்கொள்ளும், தமக்குள்ளே பிரிவினையை ஏற்படுத்திக்கொள்ளும், தமக்குள்ளே துரோகத்தை வளர்த்துக்கொள்ளும் துரோகம் ஆட்கொண்டு இந்த இனம் முற்றாக அழிவை சந்திக்கும் நான்கில் ஒரு பிரிவே மீட்சி பெறும் அப்போது என் நாமம் கொண்டு ஒரு வீரன் பிறப்பான் அவனால் எஞ்சிய இந்த இனம் எழுச்சி பெறும் இதே சுகந்திர காற்றை சுவாசிக்கும் என்றாராம்.(முருன் சம்காரம் நூலில் இருந்து…)

அதற்கிடையில் முருகப்பெருமான் கூறியதை போன்று முதலாவது கடல்கோளின் பின்னர் முதல் துரோகம் தமிழ் மண்ணில் அரங்கேறியது. மா மன்னர் இராவணனின் ஆட்காலத்தில்தான் முதலாவது துரோகம் அரங்கேறியதாக தமிழர்களின் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

இராவணனின் ஆட்சிக்காலத்தில் வந்தேறிகளான பாரசிக வழிப்பறி கொள்ளை கும்பலோடு மோதுவது என்று முடிவெடுத்தபோது வந்தேறிகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டார்கள் தங்கள் வீட்டு பெண்களையும் பொன்களையும் காட்டி விபிசன்னையும், அனுமாரனையும் வலையில் வீழ்த்தி தங்கள் வீட்டு பெண்களை கூட்டியும் தங்கங்களையும் குடுத்தும் முதலாவது சதி வலையை செய்தார்கள் அங்கிருந்து துரோகம் வளர அரம்பித்து தமிழனை அடிமைப்படுத்த ஆரம்பித்தது.

இவ்வாறு சேர,சோழ,பாண்டியர்கள் தமக்குள்ளே மோதிக்கொண்டது துடக்கம் குறுநில மன்னர்கள் காட்டிக்கொடுப்புக்களாலும் வீழ்த்தப்பட்டு தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டது. இவ்வாறு 2000ம் ஆண்டுகள் கழிய. 1954 ஆண்டின் ஆரம்ப பகுதியில் எல்லாளன் கல்லறை முன் பார்வதியம்மையாரின் கருவறையில் கருவுற்று சங்கிலிய மன்னன் ஆண்ட ஈழத்தமிழரின் நாகரீகத்தின் இராட்சதானியான நல்லூர் இராட்சதானியின் சோழ துறைமுக பகுதியான வல்வெட்டித்துறையில் 1954ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ஆம் நாள் பார்வதியின் மகனாக மீண்டும் பிரபாகரன் பிறந்தார்.( பிரபாகரன் என்பது முருகனின் மறு பெயர்). அப்போது எவரும் உணர்ந்திருக்கவில்லை இந்த பாலகன் தான் 2000 ஆண்டுகளாக அடிமை சங்கிலியை உடைத்தெறிந்து தமிழர் வரலாற்றை மாற்றி அமைத்து உலக சரித்திரத்தில் புதிய சரித்திரம் படைக்கப்போகின்றார் என்று.

இதனை தமிழர்கள் முதல் முதலாக உணர ஆரம்பிக்கும்போது அன்று முருகன் கூறியதை போன்று முதன் முதலாக அந்த தம்பி பிரபாகரனால் வீழ்த்தப்பட்டான் தமிழின துரோகி. இதுவே தமிழர் வரலாற்றில் கொல்லப்பட்ட முதலாவது தமிழின துரோகி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் பண்டார வன்னியன் வீழ்ந்த அம்பகாம மண்ணில் வீழ்ந்த தமிழரின் புலிக்கொடியை நிமிர்த்தி பிடித்து புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று முழங்கியதோடு, எவ்வாறு பண்டார வன்னியன் முல்லை கோட்டையை உடைத்து வெள்ளையர்களிடமிருந்து பீரங்கியை கைப்பேற்றினானோ அதேபோன்று ஒயாத அலைகள் என்ற பெயரில் முல்லையில் அமைந்திருந்த சிங்கள படைகளின் கோட்டையை தகர்த்து பீரங்கிகளையும் கைப்பேற்றியிருந்தார்.

இவ்வாறு துரோகிகளையும் எதிரிகளையும் அழித்து தமிழை நிமிர்த்தினான் அதே பார்வதியார் பெற்றுடுத்த முருகன் எனும் பிரபாகரன்.

இன்று இந்த 11ஆண்டுகளாக ஆயுதம் மௌனிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் “பிரபாகரம்” என்ற பெயரை கேட்டாலே எதிரி படைகளாக இருந்தாலும் சரி துரோக நரிகளாக இருக்கட்டும் அவர்களின் இரக்குலைகள் சிக்குநூறாக வெடித்து சிதறுவதுபோல் இருக்கும். அதுதான்
வரம் எனும் பிரபாகரம்!

ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.