யார்போட்டார் சாபம்….
ஆழிப்பேரலை
ஆடிய ஊழித்தாண்டவம்
ஆண்டுகளாகியும் மனங்களில் கனக்குது. ..
ஊரூராய் அலையது தாவியே
உயிர்களைப் பறித்தது….
உறவுகளை இழந்ததன் நினைவது தொடருது……
நீண்டதொரு கடலலை நீட்சியில்
எத்தனையாயிரம் முத்துக்களை நாமிழந்தோம்…..
அத்தனை உயிர்களின் நினைவுதனை சுமந்துமே நீள்கிறது நிழல்கள்…..
இன்றும்
கனத்த மழையில் கலங்குது
ஊரதன் உதிரங்கள். ….
வர்ணபகவானே….!
ஏன் இந்த கோபம்..?
எம்மீது யார்போட்டார் சாபம்…??
கொடிய சுனாமியலையால் காவுகொள்ளப்பட்ட உறவுகள் யாவருக்கும் அகம்நிறைந்த நினைவுகளுடன் சிரம்தாழ்த்தி நிற்கின்றோம்…..
து.திலக்,
26.12.2020,
09:26.