ஈழத்தின் இராஜபறவை….
உலகத் தத்துவமுரைத்த
எம் ஈழவித்தகமே…..
காலநதியிடை கலந்தொரு
மதியுரைத்த முழுமதியே. ….
ஈழதேசம்தனை
உலக உருண்டையெல்லாம்
உலாவரச் செய்த காலச்சக்கரமே…..
அன்று
தாயக மண்ணில்-நீங்கள்
கால்பதிக்கும் நாள் பார்த்து வழிநெடுக
காத்திருக்கும் ஈழவிழிகளெல்லாம்…..
“நாளை அரசியல் ஆலோசகர்
வன்னி வருகிறார்”……
பத்திரிகையின்
முதன்மைப் பதிப்பு….
காலையானதும் செய்தித்தாள்தேடி
கால்கள் ஓடும்
கண்கள் ஆவலோடு செய்தியதைத்தேடும்..
கரிகாலன் கைலாகு கொடுக்க
ஈழக்காவியத்தின் தத்துவாசிரியனின் நிழலுரு
மக்கள் கண்குளிரக் காட்சிதரும்….
தாயகத்தலைவனுடன்,தானைத் தளபதிகள் புடைசூழ
ஆங்காங்கே தொடர் பேச்சுக்கள்,
வெகுஜன சந்திப்புக்கள்,
போராளிகள் மனம்நிறை கருத்தாடல்கள்,
மக்களோடு மக்களாகப் பயணங்கள்…..
புதினத்தாள்கள் பலராலும்
அதிகம் புரட்டப்படும் புதுச்செய்திகள் அறிய…..
சொற்ப நாட்கள் கழிய…
வன்னிப்பெருநிலப்பரப்பின் புழுதிக்காற்றோடு
உலங்குவானூர்தி-முத்தவெளியை சிலநிமிடம் முத்தமிடும்..
மறுகணமே ஆகாயப் பரப்பின்
மேல்க்காற்றைக் கிழித்தபடி
“தாயகத்தின் இராஜபறவை” உயரப்பறக்கும்….
பார்த்திருந்து மகிழ்ந்த தருணம்
இன்று
கடற்கரையோர மணல்கும்பியானது காண்…
எப்படி மறக்க
உலகத் தமிழரின் மனம்நிறைந்த
அரசியல் ஆலோசகர்….
மேடைப்பேச்சுக்களில்
புன்னகை புனையும் புலவன்…..
அரசியல் பேச்சில் வெல்லமுடியாத
“இராஜ கிரீடம்”…..
மரணத்தின் முன்பே ஓய்வுதேடிய புனிதன்….
நோயின் தாக்கம் ஏக்கம் கொடுத்தாலும்
இறுதிவரை ஈழப்பணியாற்றிய தேசபக்தன்….
கொடியநோயின்
அதியுச்ச பிரயத்தனத்தால் இறுதிவிடைபெற்ற
ஈழக்குடும்பத்தின் இமயம் “தேசத்தின் குரல் ”
அன்ரன் பாலசிங்கம்
அண்ணர் அவர்களின்
நினைவு நாளில்
எமது
இதயபூர்வமான வணக்கம். …
அகம்நிறைந்த நினைவுகளுடன்
சிரம்தாழ்த்தி வணங்குகிறோம். ….
து.திலக்(கிரி ),
14.12.2020,
19:40.