தமிழீழ போர்க்களத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். 06

In பகிரப்படாத பக்கங்கள்

இரகசியத்தின் பெறுமதி

போராளி ஒருவர் தமிழீழத்தின் வெளிப்பகுதி ஒன்றில் இரகசியப் பணி ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போராளி இரகசிப் பணியில் ஈடுபட்டிருப்பது போராளியின் தாய்க்கு தெரியும். தாய் தமிழீழப் பகுதியில் வசித்து வருபவர்.

ஒருமுறை தமிழீழப் பகுதிக்கு வெளியே சென்றபோது எதிர்பாராத முகமாக தன் மகனைக் காண்கின்றாள். மகனோ ஒரு இரகசியப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்தை நன்கு அறிந்த தாய் அவனுடன் கதைப்பதால் தனது மகனுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி மகனைப் பார்த்தும் கதைக்கவில்லை.

அவனும் தாயைக் கண்டுவிட்டான். ஆனால் அவன் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டான். ஒரு பார்வையுடன் இருவரும் பிரிந்து விட்டார்கள். தாயோ தமிழீழத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துவிட்டார்.

அதற்குப் பிறகு தான் பெற்ற பிள்ளையைக் பார்க்கவில்லை. அன்று ஒருநாள் தமிழீழத்திற்கு வெளியே தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அந்த தாயினால் தனது கண்களையே நம்பமுடியவில்லை.

நம்பித்தான் ஆகவேண்டும் வெடிகுண்டு வெடித்து சிதைந்துவிட்ட நிலையில் தனது மகனின் முகத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டாள்.

மகன் தனது தேசத்திற்காகவும் தனது மக்களுக்காகவும் தன்னை இரகசியாக அர்பணித்தை உணர்ந்துகொண்டாள். ஆனாலும் தனது கணவருக்கு கூட கூறவில்லை. தனக்குள்ளேயே இரகசியத்தைப் பூட்டி வைத்தாள். அந்த இரகசியப் பணியின் பெறுமதி அந்த தாயுக்கு நன்கு தெரியும். அந்த தாயையும் மகனையும் சாதாரண மனிதப் பிறவிகளாக கணிப்பிட்டுவிடலாமா?

தகவல்: புலனாய்வுத்துறை, தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம்.

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.