குருதியில் சிவந்த
முள்ளிவாய்க்கால் மண்ணே……
முள்ளிவாய்க்கால் மண்ணே
எங்கள் முல்லைநிலத்து அழகே
நீ எத்தனை வலிகளை
சுமந்து நிக்கிறாய்
பெரும் எல்லையில்லா துயரினில்
அமிழ்ந்து கிடக்கிறாய்
சொல்ல அழுதால் தீருமோ
நாம் பட்டவேதனைகள்
மெல்ல சிரித்தால் மறைந்திடுமோ
எம் மனதின் கவலைகள்
தமிழனை தாங்கிய நிலமே
குருதியில் சிவந்து கிடக்கிறாய்
தமிழனின் கண்ணீர்
மழையில் நைந்து கிடக்கிறாய்
எம் இலட்சம் சனங்களில்
ஆன்மாக்கள் இங்கே தான்
அமைதியிழந்து அலையிது
கொண்ற கயவரை திண்ற
காலம் வேண்டி காத்திருக்கு
காலம் தந்த ரணங்களை
சுமந்தபடி கடந்து செல்கிறது
எம் காலைகள்
விடியாத இரவாக
நீண்டு செல்கிறது
ஔியேற்ற நீ வேண்டும்
வானத்து சூரியனாய்
நீ வர வேண்டும்
உன் வரம் வேண்டும் தலைவா…..!!
கவியாக்கம் : நாகதேவன் தமிழீழம்.
( நாம் தமிழர் கட்சி சனிப்ரியன் )