ஓர் நாள் நீதி கிடைக்குமா?
செல்லொன்று கூவியது
ஓலமிட்டு
ஓரு பறவை அழுகிறது
வந்த எறிகணை
அவள் குடும்பத்தையே
திண்று போட்டது
சோலைக்குயில்
கூண்டுக்கிளி ஆகிப்போனாள்
சிறகுகள் ஒடிக்கப்பட்டு
இன்று
செந்நீரில் புதைந்த
சொந்தங்களை எண்ணி
கண்ணீரில் கரைகிறாள்
காலமும் ஓர்நாள்
நீதி வழங்குமா?
இல்லை
இவளையும்
காவு கொள்ளுமா?
எழுத்துருவாக்கம் : நாகதேவன் தமிழீழம்.