காதுகளில் சத்தம் இல்லை
கண்களில் பயம் மட்டுமே..
நகரங்களை
விழுங்கிக்கொண்டிருக்கும்
கந்தக புகை வெள்ளை
ஆடைகளை அழுக்காக்கி
குருதிகளால் நனைத்தபடி…
உயிரை தவிர
எதுவும் பெரிதில்லை
அப்போது எமக்கு,
போர்க்களத்து கல்வி
போதித்தவை ஏராளம்
என்பதால்,
அரண்கள் தான்
எம்மை அவ்வப்போது
காப்பாற்றின,
சிதிலங்கள் ஒழுகிய
கல்வியில் ஒரு சிறு
கலங்கமும் இல்லை,
அதே துணிவோடு
ஆற்றலுற்று எழுந்து
நிற்கும் தமிழின கல்வி
போர்களத்தில் மிஞ்சியவையே..
கற்றுத் தேர்
கல்வியுடனே என் தமிழ் வீரங்களே…
தே.பிரியன்