மீண்டும் நடுகல் வழிபாட்டில் உயிர்பெறும் தமிழினம்…
விதைத்த விடுதலைவிதைகளின்
வீரியம் மீண்டும் வெளிப்பட்டது
விழித்துக்கொள் தமிழா என்றுனை
வீர அறைகூவி விரைந்தழைத்திட்டது…
சிதைத்த உயிர்களின் நினைவினைச்
சீரழிக்கச் சீறிச் சினங்கொண்டது
சிறுமைத்தனம் செய்தோர் யாரெனினும்
சீராய் ஓரணிநின்று செயல்கொண்டது
இடித்த கற்கள் ஒவ்வொன்றும்-நெஞ்சின்
ஈரத்துடிப்பில் இயங்குவதை நீ அறியாயோ
இனத்தை அழித்தவரின்-இழி
ஈனத்தனத்தை உரைப்பதை நீ புரியாயோ?
இடித்த நினைவிடம் கோயிலெமக்கு
ஈடில்லா உயிர்கொண்ட தேசவிளக்கு
துடித்த தமிழினம் தேடுமே இலக்கு
தூய்மையாய் நடுகல் மீளநிலைநிறுத்து!
தடுத்த தடைகள் தகர்க்கின்ற இனமிது
தாய்மண் காக்கின்ற தகமையிற் பெரியது
தொடுத்த அறப்போரின் தூயநெறியிது
தோல்விப்பயமின்றித் தொடரும் வழியிது!
-காந்தள்-