நீ போர்க்களத்தில் நான் அனாதையாய்.
மகளே!
இன்று ஊரெல்லாம்
விழாக்கோலம்
நாம்மைத் தவிர
தைமுதல் நாள் இன்று
தமிழர்க்கு திருநாள்
நீ இரும்புக் கூண்டினுள்
நானோ அனாதையாய்
தெருவில்
உன் முகம் தாங்கிய அட்டையுடன்
தவம் செய்கிறேன்
உன் வருகை வேண்டி
தைபிறந்தால் வழி
பிறக்கும் என்பார்
எத்தனை தைகள்
கடந்துபோயின
கதவு திறக்க நேரம்
கூடவில்லையோ
கைவிலங்கு உடைபட
வலிமை சேர்க்கவில்லையோ
நான்
தேசவிடுதலை பற்றி
பேசிக்கொண்டிருந்தேன்
நீ செய்துமுடித்தாய்
புத்தாடை உடித்தி
கைநிறைய கண்ணாடி
வளையல்கள் அணிந்து
மையிட்ட கண்ணோடு
உன்னை அலங்கரித்து
பார்க்க எண்ணிணேன்
நீயோ
போருடை தரித்து
தேசம் மீட்க
போரணியில்
களம்புகுந்தாய்
உன்னை மகளாக
பெற்ற மகிழ்வில்
உலகப் பந்தில்
ஓரடி மண்ணால்
உயர்ந்து நிற்க்கிறது
தமிழீழ மண்.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.