தீயில் பிழைத்தொரு
வாழ்வு சமைத்தது
நெஞ்சம் மறந்திடுமோ…!
உயிர் காவிதிரிந்தொரு
காலம் இருந்தது
காயம் மறைந்திடுமோ…..!
நோவு சுமந்தொரு
பிஞ்சு நகர்ந்த அன்
நாட்கள் நெருங்கிடுதே……!
செவி கூவி பறந்தொரு
சன்ன துகளதில் பல
உயிர்கள் மடிந்ததுவே……!
ஆவி பறந்தொரு
ஆழம் புதைந்ததே
அந் நாளும் சிதைந்ததுவே…!
அதை யாரும் நினைத்திடா
இருக்கும் மனநிலை
எங்கும் பிறந்திடுமோ……!
கன்னிக்குயில்களின்
தேசம் அழித்திட
வேசம் புனைந்தவரே….
கேள்…!
ஆழப்பிறந்தவன் வலி
தாங்கி எழுந்திடும்
வரம் பெற்று நிமிர்வபனே….
நீளும் நினைவதை
நாளும் சுமக்கிறோம்
ஆளும் புலமையுடன்……!
கரை நீந்திக்கடந்தொரு
நாளை அணைத்திடும்
வேளை வரும் வரையே…..!
தாக நெருப்பது
தீயில் கருகிடா
யாகம் நிகழ்த்துகிறோம்….!
என்னாளும் வலிமையை
மார்பில் சுமந்துமே
வாழ்வை பழக்குகிறோம்…..!
தே.பிரியன்