சாவினை வென்ற காவியங்களே
சந்தன பேழையில் உறங்கும் வீரரே
சாவினை வென்ற காவியங்களே
செந்தமிழ் ஈழத்தின்
தாகம் சுமந்திட்ட வீர புதல்வரே
உறவுகள் கூடி ஓடோடி வந்தோம்
உங்கள் உறைவிடம் தேடியே
உணர்வுகள் இழக்காது உரிமைகள் மாயாது
அடை மழையானாலும்
சூழல் காற்று ஆனாலும்
அணையாது தீபங்கள் ஒளி கொள்ளும்
ஏறிடும் கொடியிலும் உங்களின் தியாகங்கள்
காலத்தால் அழியாத காவியங்கள் நீங்களே
உரிமைக்காய் உயிர் வீசிய உன்னத வேங்கைகளே
விடுதலை வேட்க்கை சுமந்து நடந்திட்ட
தேச ப்புதல்வர்களே
சன்னதம் கொண்டாடிய சரித்திர வான் களே
எதிர்வரும் தடையுடைத்து
எதிர் நின்று எதிரியை
கொன்ற எரிமளைகளே
காலம் உங்களை வணங்கும்
கார்த்திகையில் தீபங்கள் எரியும்
கண்ணீரில் உங்கள்
கல்லறைகள் நனையும்
பூக்களும் உம் கல்லறைகளில் முத்தமிடும்
சிவா TE