இது காவல் தெய்வங்களின் மாதம்…!

In தாயக கவிதைகள், மாவீரர் கவிதைகள்

இது காவல் தெய்வங்களின் மாதம்…!

கருக்கொண்ட வேங்கைகள்
உருக்கொண்ட நாள்.
கன்னியும் காளையும்
காவல் காத்து
கண்மூடிய நாள்.
எதிரி கதைமுடிக்க
விண்ணதிர்ந்த ஓசையுடன்
வெடிப்பிளம்பானவர்கள்
நினைவு நாள்.

காற்றிற்கும் கடலுக்கும்
தெரிந்தவர்களின்
ஈகம் புரிந்த நாள்.
தெரியா புரியாத முகம்
மூடிகளின் திருநாள்
எங்கள் மாவீரர் நாள்.

உச்சி முகர்ந்த தாயின்
பூமுகத்தை காணத்துடித்த
வீரர்களின் திருநாள்.
உதிரப்பாலுட்டியவள்
தன் சேய்க்கு பூ மாலை
போட்டு வணங்கும்
வீரத்தமிழிச்சிகள் எழுச்சி
கொள்ளும் நாள்.

ஊரோடும் உறவோடும்
நீங்கள் வாழ வேண்டும் என்று
வேரோடு பகைகுகை தகர்த்த
வீரத் தெய்வங்களின் திருநாள்.
தலைவர் வழி நின்று
தளரா உறுதிகொண்டு
பகை விரட்டி
தமிழர் வரலாற்றில்
பதிந்தவர்கள் திருநாள்.

சற்று பின்னோக்கி பாருங்கள்
மா வீரர்களின் பூ முகங்கள்
உங்கள் நினைவில் வரும்
ஆகாய கடல்வெளி என்றும்
புலிப்பாச்சல் என்றும்
ஓயாத அலைகள் என்றும்
வீசிய புயல்களின் நினைவுகளை
சற்று மீட்டி பாருங்கள்.

தேசத்தின் புயல்கள் என்றும்
கடற் கரும்புலிகள் என்றும்
வான் படை என்றும்
தரை கரும்புலிகள் என்றும்
தரைப்படைகள் என்றும்
எங்கள் தலைவன் வளர்த்த
சிற்பிகளை சிரத்தில் இருத்துகின்றோம்.

காடுமலை தாண்டி
பகைவன் கதைமுடிக்க
கட்டுநாயக்கா சென்ற வீரர்களும்இ
பக்கத்து வீட்டுக்காறன் தான்
பகைவன் என எட்டி உதைக்க
யோசெப் படைமுகாம் சென்ற
வேவு வீரர்களும்
தமிழ் மன்னனின் கதை கூற
அனுராதபுரம் சென்ற
எல்லாளனின் வீரர்களும்.
எல்லாம் எங்கள் மண்ணில்தான்
வளந்தர்கள்.

இந்தனைக்கும் இன்றும்
வியப்பாக இருக்கும்
முகம்மூடி வீரர்கள் சென்ற
பாதைகளை எவராலும் காணமுடியாது.
எல்லாமே எங்கள் மாவீரர்களின்
தியாகத்தினால் வந்த வீரமடா.

புதுக்குடியிருப்பில் புது வடிவம் எடுத்த
எங்கள் வீரர்களின் ஈகங்கள்
உலகிற்கு புரியாது

கொஞ்சி விளையாடும்
குழந்தை சிரிப்புடனும்
நெஞ்சில் வெடிமருந்துடனம்
வஞ்சம் கொண்ட கயவர்
கதைமுடிக்க நெஞ்சு நிமிர்த்தி
நடந்த வீரர்களின் தியாகங்கள்
எழுது கோலால் எழுதிவிட முடியாது.

அந்த உப்புக்கடலில் கரைந்த
குருதிகள் இன்றும் உயிர்வாழ்கின்றன.
கடற்கரை மணலதனில் பதிந்த சுவடுகள்
இன்றும் பாதம் பதிக்கின்றன
ஈழவிடுதலையின் இலக்கினை நோக்கி.
காதலன் கைபிடிக்க நினைத்தவள்
கையில் ஏ .கே எடுத்து
காவலரணில் வீர களமாடி மடிந்தாள்
கன்னியவளின் கற்பனையில்
வளர்ந்ததெல்லாம் ஈழம் தான்
எண்ணி எண்ணி நினைக்கின்றேன்
கார்த்திகை மாதமதில்.

வீரத்து காளையவன்
அவன் ஈழத்துக்காளை
ஈரமான நெஞ்சியில்
இறுக பற்றிய துப்பாக்கியுடன்
உறுதி கொண்ட இதயத்தில்
பதிந்ததும் ஈழம்தான்.
இந்த மாரி மழையில்
ஈழத்தது காளையின்
விடியலில் வாழ்வுதனை
எண்ணி எண்ணி துடிக்கின்றது.
இன் இதயம்!

ஈழம் புகழ் மாறன்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.