சூரியப்புதல்வர்கள் – 5
அன்பென்றால்
ஆழ்கடலின் ஆழம்
போரென்றால்
கடுஞ் சூறாவளி வேகம்
சூரியப் புதல்வர்கள்
எங்கள் புலி வீரர்…!
எரிமலையே எட்டி நின்று
தொட்டுப் பார்க்த்
தயங்கி நிற்கும்
அக்கினிப் பிளம்புகள்
எங்கள் மாவீரர்…!
இடியும், மழையும்
நின்று நிதானித்து
மெளனமாய்க் கடக்கும்
துயிலுமில்ல வாசல்
உங்கள் வாசம்…!
உங்கள் வாசல் தேடி
செங்காந்தள் சூடி
நெய்யிலே தீபமேற்ற
நெருங்கிவரும் நேரம்
கண் திறந்து பாரும்…!
-தமிழீழன்-