லெப்.கேணல் அமுதாப்….!

In வீரத்தளபதிகள்

சிறப்பு தளபதி லெப் கேணல் அமுதாப்.!

சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி லெப்.கேணல் அமுதாப் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார். கடந்த 31.03.2009 அன்று இவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளார்.

லெப். கேணல் அமுதாப்

சிதம்பரப்பிள்ளை சிவநாயகம்

பிறப்பு- 15.04.1976

வீ.சாவு-31.03.2009

சொந்த முகவரி-
தவசியாகுளம்,சாஸ்திரிகூழாங்குழம்,வவுனியா

தியாக சரித்திரங்களின் நாயகர்கள்
தாயக மண்ணின் காவலர்கள்
தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் – தமிழீழத்
தாய்க்காக களமாடிய…. மாவீரர்கள்!

கந்தகக் காற்றைச் சுவாசித்து…
விடுதலை ஒன்றையே யாசித்து…
அவர்கள் புரிந்தது பெருந்தவம்
தம்மையே உருக்கி…. எம்மைக் காத்த
காவல் தெய்வங்கள் !
மண்ணின் நிரந்தர விடியலுக்காய்,
நிரந்தரமாய் மண்ணுள் உறங்கும்
வீரத் தமிழ்ச் செல்வங்கள் !

எதிரியின் தோட்டாக்கள் கூட
இவர்களைப் பார்த்து அஞ்சும்!
மரணம் கூட இவர்களிடம் கெஞ்சும்!
இவர்களின் தியாகம் மரணத்தையும் விஞ்சும்!!
புன்னகைத்தபடியே போர்க்களம் புக
இவர்களால் மட்டுமே முடிந்தது!
எம் தேசமே இவர்களால்தான் விடிந்தது!!

தாயக மண்ணைத்தான் நேசித்தார்கள்- அதன்
விடுதலை ஒன்றைத்தான் சுவாசித்தார்கள்
இவர்களின் கல்லறைத் தீபங்களின் ஒளியில்தான்
எம் தேசம் ஒளி கொண்டது…!
இவர்களின் பாதத் தடங்களில்தான்
எம் இனம் வழி கண்டது…!

மாவீரர்களே…!
உங்களை விதைத்த இடத்தையெல்லாம்
எதிரி சிதைக்கிறான்!
நீங்கள் இல்லாத எங்களையெல்லாம்
தினமும் வதைக்கிறான்!!
எங்கே போனீர்கள் எங்கள் செல்வங்களே ?
மீண்டும் வாருங்கள் காவல் தெய்வங்களே !

“உண்மையான தியாகங்கள் என்றைக்கும் வீண்போவதில்லை”
அதுவே நீதியும் நியதியுமாகும்…!!!
பட்டமரங்களெல்லாம் ஒருநாள் துளிர்விடும்… !
கார்த்திகைப் பூக்கள் ஊரெல்லாம் மலரும்…!
ஈழ தேசமெங்கும் உங்களுக்காய் …அகல் விளக்கெரியும்…!
தோட்டாக்கள் துளைத்த சுவர்களிலெல்லாம்
உங்கள் திருமுகம் ஒளிரும்…!

உங்கள் கல்லறைகள் வெறும் கல் _ அறைகளல்ல ,
ஈழத் தாயின் கருவறைகள் !
இலட்சியத்தீ கருக்கொள்ளும் நெருப்பறைகள்!
நாம் உங்களை புதைக்கவில்லை…
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்!

விழ விழ எழுவோம்!
வெட்ட வெட்டத் தழைப்போம்!
உங்கள் தியாகங்களை இலட்சியமாய்ச் சுமப்போம்…!
எம் தேசத்தின் விடியலுக்காய்… இறுதிவரை உழைப்போம்…!!

மாவீரர்களே…
நாம் உங்களைப் புதைக்கவில்லை…!
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்…!!

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.