தமிழீழத்தின் முதற் பெண் தளபதி,
தேசத்தலைவன் வழியில் வந்த ஈழத்து வரலாற்றுப் புதல்வி இவள்
களமாட வந்த வீரத்தமிழிச்சிகளை காத்திட்ட அன்னையுமிவளே
மணலாற்று காடுகளில் வீரப் பெண்களை
வளர்திட்ட வீரமாதேவியும் இவள்
விடுதலைப் பாசறையில் வீரத்தை ஊட்டிய
வீரத்தின் விளைநிலம் இவளே…
அடர் காட்டில் விடுதலைக்கு விலங்குடைத்த வீரச்சிட்டும் இவள்
அக்கினிக் குஞ்சுகளை முதலில் வழிநடத்திய முதற் தளபதியும் இவளே
நெஞ்சு புடைக்க விறைத்து நின்று வீர கட்டளை வழங்கும் வேங்கையும் இவள்
இளமைக்காலத்து நினைவை அள்ளி வழங்கும் தோழியும் இவளே…!
செல்லமாக இருந்தாலும் கண்டித்து வழிநடத்தும் ஆசானும் இவள்
ஈழத்துப்பெண்களை புரட்ச்சிப் பாதைக்கு செப்பனிட்டவளும் இவளே
அண்ணனோடு துணைநின்று தமிழுக்கு சேவகம் புரிந்தவளும் இவள்
திக்கற்ற கானகத்தில் வீர சிறுத்தைகளின் திசைகாட்டியும் இவளே…!
ஈழத்துப் பெண்களை விழுந்து விழுந்து கவனித்த “நைற்றிங்கேலும்” இவள்
ஈழத்து விடுதலைக்கு உழைத்து உழைத்தே தேய்ந்தவளும் இவளே
அடைபட்டு அடங்கி கிடந்த பெண்களை வீரமாக்கிய வேலைநாச்சியாரும் இவள்
குற்றம் செய்த குஞ்சுகளை குட்டியே திருத்திய கைகளும் இவளே…!
ஆரம்ப நாட்களில் கடின பயிற்சி வேளையிலும் ஆறுதலும் இவள்
துன்ப வேளைகளிலும் இன்பத்தை தந்த புன்னகை அரசியும் இவளே
நோயுற்ற வேளைகளிலும் எம்மைக்காத்த மருத்துவச்சியும் இவள்
இறுதியில் நோய்கொண்டுபோக வீரச்சாவின் துயர் தந்தவளும் இவளே…!
எழுத்தாக்கம்,
ஈழம் வாகீசன்.