வெடியாலே விடிவாகும் எம் தாயகம்
அனுராதபுரம் மீதேறிப் புலி போனதும்
வெறும் துகளாகி போனது பார் பகை வீரியம்
பகை ஏறும் வானுர்தி பல கோடிகள்
சிதை ஏற்றி சிரித்தனர் புலி வீரர்கள்
காடையர் களுகேறி தினம் வந்துமே
பிஞ்சுகள் உடல் தன்னில் அனலூட்டினர்
தேடியே தளம் சென்ற கருவேங்கைகள்
கூட்டிலே சிதை ஏற்றி ஏரியூட்டினர்
விடியாது ஒரு நாளும் தமிழ் வாழ்வென பகை மனதாலே கணக்கொன்று தினம் போடவே
அடியாலே சொன்ன பதில் இதுவாகுமே
தேடிப்பார் சிங்களமே உன் பாயிலும்
தெரியாது அருகேறும் உன் ஊரிலும்
முடியாது ஒரு போதும் புலி வீரியம்
வெடியாலே விடிவாகும் எம் தாயகம்
கவிப்புயல் சரண்