உன் தாய்நாடு மீட்க வா..
நாம் புலியாகிப் பாய்வோம்
பகைவன் பொடியாகி வீழும்வரை
வெறிகொண்டு பாய்வோம்
சிங்களத்துவேர் அறுபடும்வரை
சினம் கொண்ட புலியாய்
என்சனம் படும் இன்னல் தீரும்வரை
நீண்ட நெருப்பாற்றையும்
நீந்திக் கடப்போம்
என் தலைவன் வழியில்
மீண்டும் போரொண்டு வேண்டும்
தமிழ் வீரத்தை பறைசாற்ற
தமிழர் வாழ்வியலை நிலைநிறுத்த
வாள்களை சாணைபிடித்து
வைத்துள்ளோம்
வரும் பகையின் தலைகொய்ய
பெரும் படையாகி
அணிவகுத்து நிற்க்கிறோம்
வரும் போரை எதிர்பார்த்து
காத்திருக்கிறோம்
நெஞ்சில் துணிவுண்டு
நேரிய பாதையுமுண்டு
இனி என்ன தயக்கம்
எழுந்து வா தமிழா
உன் உறக்கம் கழைத்து
உரிமைக்கு பலம் சேர்த்திடு
காற்றில் வளைய நீ என்ன
நாணலா
கம்பீரமாய் நிமிர்ந்து நிற்க்கும்
பனைமக்காடு
அடிகள் வாங்கியும் அடிபணியா
திமிர்கொண்ட இனமல்லவா
நீ நிலமிழந்து வாழ்வாத
அதனிலும் களமாடி நிலம் மீட்க
விரைந்து வா தமிழா
உன் தாயவள் அழைக்கிறாள்
ஆயிரம் ஆண்டுகள் வாழ்தென்ன பயன்
அந்நியன் காலின் செருப்பாய்
நீ புலியென நிமிர்ந்தால்
இனி மலர்ந்திடும் தமிழீழம்
உலகில் உன் நாடு இதுவென்றே
முரசறைவாய் தமிழா.
எழுத்துருவாக்கம் : நாகதேவன் தமிழீழம்