புதுவையின் கவி ஈகை..

In தாயக கவிதைகள்

புதுவையின் கவி ஈகை..

ஈழத்தின் இயல் இசை நாடகம்
பண்படுத்தும் பல்கலை கோட்டை,
புதுமை.. கவிவரிகள் அலைமோதும் கடற்கரை
எங்கள் கவி கோ புதுவை இரத்தினதுறை

பதினான்கு வயதினிலே
கவி தளம் வென்றாய்,
பாமரன் தன் வாழ்வை நின்று கேட்பதை
உம் கவி அனுகூலத்தில் கண்டாய்

கவியில் அரசியல் கலந்து பாய்கின்ற
பெரும் நீர்வீழ்ச்சி,
மக்கள் வளம் உம் கவிகேட்டு
எழுந்து நடக்க செய்கின்ற உயர் எழிச்சி

உறங்கிடும் இளமைகள் விழித்தெழ
உம் படைப்பால் சூடுவைதாய்,
நாம் களைப்பின்றி இலக்குநோக்கி ஓடிட
என்றும் இருக்கும் உம் கவிதை கையிருப்பாய்

மக்கள் நினைப்பதையே உம் கவி பாடும்,
மண்ணுக்காய் மாண்ட மறவர்
கனவையே அது தினம் தேடும்

கவியடியெடுத்து எம்மவர் நுகத்தடியை
உடைத்தெறிய வந்தாய்,
இயல்பாய் நீர் சிற்பி என்றதாலோ
கவிதாயுதம் எடுத்து மாந்தரிடத்தில்
புரட்சி சிற்பம் கொண்டுவந்தாய்

இன இழப்பை மட்டும் சொல்லி
புலம்பாத மேன்மை சொற்கள்,
எம் சிந்தை தீட்டி திடப்படுத்தும்
கவி ஒவ்வென்றும் படிக்கற்கள்

புதுவை போற்றல்மிகு கவி ஈகை,
வேங்கை வெற்றி உலகெங்கிலும்
ஒழித்திட சுழலும் மொழியிசை வாகை

வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்
உம் இருவிரல் இடுக்கில்
இம்மை ஈன்ற காவிய கானம்,
பாடல் கேட்க்கும்பொழுதெல்லாம்
வென்றுவந்த நிலம் கண்முன்னே தோன்றும்

வாழ்த்துகிறேன் மூத்த கவியே
என் புலமையால் அல்ல
உம்மேல் இருக்கும் அதீத அன்பினால்…

✍️ சஜிதரன்
பிரான்ஸ்

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.