ஒரு புலிவீரன் விழுகின்றபோது அவனது துவக்கு எழுதுகின்றது…!
நண்பனே..
நான் வருந்திவதெல்லாம்
மக்களின் விடுதலைக்காக
இந்த மண்ணின் மடியில்
சாகின்ற மகிழ்ச்சியை
இன்னுமொருமுறை பெறமுடியாதே..!
என்பதற்காகத்தான்.
என் ஆயுத த்தைப் போல
நானும் சாகாமல் இருந்தால்…
இருப்பினும் நண்பனே…
இறந்த பின்னும்
இந்த மண் என்னை முத்தமிடுகின்ற
போதெல்லாம் ஒரு மரமாக செடியாக
முறைத்து உன் உதவிக்கு
வருவேன்.
பகைவன் உணரமாட்டான்
அவனது குண்டுத் துளைப்பால்
கொப்பளிப்பது குருதி மட்டுமல்ல
எமது கொள்கைப் பிடிப்புமென்று…
இனவெறியனுக்கு தெரியாது
நம் பதுங்கு குழிகள் பாச
ஊற்றுச் சுரப்பது..
நம் மயானத்தில்
மனிதம் பாட்டிசைப்பது
நம் சாவீடிகள்
சரித்திரம் படைப்பது.
எனக்கு தெரியும்
போராளிப் புலிகள்
நண்பனின் உயிரைக்
காப்பாற்ற முடியாத போது
அவனுடைய ஆயுத்த்தையும் இலச்சியத்தையுப் காப்பாற்றுவார்கள் என்பது.
வீரன் விழுகின்றபோது
அவனுடைய துவக்கு
எழுந்து நிற்கின்றது
வேறோரு கையின் தழுவலுக்காக…
நண்பனே…
இருளும் என் உயிர்ச் சுடருக்குள்ளே
பதிகின்ற அறிவும் நம்பிகையும்
இதுதான்
விடுதலை இரத்தம்
என்றும் விழலிக்குப் பாய்வதில்லை
வெற்றிக்கு முன்பாக ஓய்வதுமில்லை.
போராளியும் வாழையும் தன் பரம்பரையை
விதைக்காமல் விழுவதல்லை நானும் தான்.
– கவிஞர் இரும்பொறை