வந்தவன் ஆள்கிறான் எம்நிலத்தை அவன்
வந்தேறி என்கிறான் எம்மினத்தை…!
ஒவ்வொரு தமிழனும்
உன்னை.. அறி
ஒவ்வொரு தமிழனும்
உண்மை.. அறி
இது எத்தனை
ஆண்டுகள் சுமந்தவலி
இன்னும் இப்படியே
இருந்தால் என்னவழி.
வந்தவன் ஆள்கிறான்
எம்நிலத்தை-அவன்
வந்தேறி என்கிறான்
எம்மினத்தை
மந்தைகள் ஆக்கிறான்
எம்மக்களை-மண்டியிட
வைக்கிறான் எம்மானத்தை.
எச்சைகளாய் சிலர்
திரிகிறார்
எடிபிடிகளாய் பலர்
அலைகிறார்
பிச்சை நாய்களின்
பேச்சைக்கேட்டு
பின்னாலும் முன்னாலும்
பலர் வளைகிறார்.
என்னதான் கண்டாய்
இத்தனை நாள்
என்னத்தை தந்தான்
புத்தனின் வால்
இனியும் நம்பி ஏமாறாதே
கனிகள் உன்கைக்கு
தானாய் வராதே
இதைதான் சொன்னான்
ஒரு தலைவன்
அன்றுவிதைத்தான்
விடுதலையை புலிமறவன்.
இனியும் நம்பி ஏமாறாதே
தலை குனிந்தால்
தலைவிதி என்றும் மாறாதே
ஒவ்வொரு தமிழனும் உன்னையறி
உனக்குள்ளும் எரியுது தீப்பொறி.
த.யாளன்