பலம் பொருந்திய சக்தியாக ஒன்றிணைந்து போராடுவோம்…!

In தமிழீழத் தேசியத்தலைவர்

பலம் பொருந்திய சக்தியாக ஒன்றிணைந்து போராடுவோம்

‘ஆயுதங்களைக்கயளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பாமல் எதற்க்காக எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை ஏந்தியது. எதற்க்காக நாம் பதினைந்து ஆண்டு காலத்திற்கு மேலாக ஆயுதப் போராட்டத்தை நடத்தினோம். இதற்கான காரணிகள் என்ன என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆயுதப் போராட்டம் தோன்றி வளர்ந்த்ஸ் எதார்த்தப் புறநிலைகளை ஆராய்ந்து பார்த்து அதன் காரணிகளை நீக்கிவிட உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் ஆயுதப் பிரச்சினை தானாகத் தீர்ந்துவிடும்.

அதனைவிடுத்து ஆயுதங்களைப் போட்டதும் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் எனக்கருதுவதும் மிகத்தவறான கண்ணோட்டமாகும். பூதாகரமாக வளர்ந்துவிட்ட இனப்பிரச்சினையும், அதனால் எழுந்த சுதந்திர வேட்கையின் புரட்சிகர வெளிப்பாடாகவே ஆயுதப் போர்வடிவம் தோற்றம்கண்டது. ஆகவே இனப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படாதவரை ஆயுதப்பிரச்சினை தீரப்போவதில்லை. இதனை சிறீலங்கா ஆட்சியாளர்களும் சிங்கள மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

எமது மக்களுக்கு ஒரு சுபீட்சமான எதிர்காலத்தையும், நிரந்தரமான அமைதியையும், சுதந்திரமான வாழ்க்கையையும் பெற்றுக் கொடுப்பதற்கு எமது விடுதலை இயக்கம் தொடர்ந்து போராடும்.

இன்று எமது மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வது எமது இயக்கம் தான். எமது இயக்கத்தை ஒரு பலம் பொருந்திய தேசிய சக்தியாக கட்டியெழுப்புவதற்கு தமிழ் மக்கள் எமது இயக்கத்தின் பின்னால் அணிதிரளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

(எனது மக்களின் விடுதலைக்காக நூலிலிருந்து. )

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.