தமிழா எழுந்துவா
…………………………….
வாழ்ந்த நிலம் நமக்கில்லை
வாழ வழியும் நமக்கில்லை
வயிற்றுப்பசி ஒருபக்கம்
வம்சம் அழியுது ஒருபக்கம்
தெரிந்தவரலாறும்
திரிந்துபோகுது
தேன்தமிழோ
தேய்ந்து போகுது
புரிந்துகொள்ள
யாரிங்கு உள்ளது
புலிகள் புற்களை
தின்பதுவா நல்லது
செறிந்து வாழ்ந்த தமிழா
செங்கோல் கொண்ட தமிழா
முறிந்து வீழ்ந்து கிடப்பதா-உன்
முன்னோர் வரலாற்றை மறப்பதா?
பிரிந்து பிரிந்து நீ வாழ்ந்தால்
பிறந்த மண்ணை ஆள்வாயா..?
எரிந்து போன தேசத்தில்
மீண்டும்
எழுந்து நடப்போம் ஒன்றாய்வா
த.யாளன்