ஒன்றுபடு தமிழா உறங்கி விடாதே…!
ஒன்றுபடு தமிழா
உறங்கிவிடாதே
இன்றுபடுத்தால்
நாளை உனக்கிருக்காதே.
அன்று ஒருநாள்
இதுபோல் அலட்சியமாய் இருந்தோமே-அதனால்
இன்றுவரை தெருவில்
இப்படி அலைகிறோமே
எம் சொந்தமண்ணை
ஆள்பவன்
உன் பந்தமில்லையே
உன் சிந்தையிலே
இந்த எண்ணம்
வந்து குந்தவில்லையே
உன்தனது வீதிதான்
ஒன்றாய் கூடிவா
உந்தனது விதிமாற்ற
உழைப்போம் ஓடிவா
சந்திகளில் கூடுவோம்
சளைக்காமல் விரைந்துவா
சந்ததிகள் வாழவேண்டும்
ஆர் தடுத்தாலும் ஆர்பரித்துவா
முந்தைய தவறுகளை
முற்றும் களைந்து-நாம்
முன்னே செல்வோம்
ஒற்றுமையோடு ஓர்மம் கலந்து.
த.யாளன்