இது கொலைகாரரின் வெற்றியல்ல நாம்
கூறுபட்டதால் வந்த தோல்வி…!
அவர்கள் நாட்டில்
அவர்கள் மொழியில்
தேசிய கீதம்
பாடுப்போகிறார்கள்
எங்கள் நாட்டில்
எங்கள் மொழியில்
நாங்கள்
தேசியகீதம் பாடமல்
இருப்பதுதான்
எங்கள் பிழை
உணர்வுள்ள தமிழா
ஒற்றுமைப்படு
ஒரு தலைமையேற்று
வலியை திருப்பிக்கொடு
இது வீணர்களின்
வீரத்திற்கு கிடைத்த
வெற்றியல்ல
எங்கள் வேறுபாட்டிற்கு
கிடைத்த தோல்வி
இது கொலைகாரரின்
வெற்றியல்ல நாம்
கூறுபட்டதால்
வந்த தோல்வி
இது சிங்களப்
பேரினவாதத்தின்
வெற்றியல்ல
நாங்கள் சிதறுப்பட்டதால்
வந்ததோல்வி
இது அடக்குமுறையாளரின்
வெற்றியல்ல நாங்கள்
திருப்பி அடிக்கமறந்ததால்
வந்த தோல்வி
இது அதர்மவாதிகளுக்கு
கிடைத்த வெற்றியல்ல
நாங்கள் தர்மவாதிகளாக
போராடியதால் கிடைத்த தோல்வி
உடைந்து உதிர்ந்து வாழும்
தமிழா உன்னைச் சரிசெய்
கடந்கால வழியைப்பார்து
கடந்தகால வலியைச் சேர்த்து
தமிழா உனக்கோர் விதிசெய்
தேசியத்தை
சுமக்கும் இனம்
ஓர்நாள்
தன்தாய் தேசத்தில்
தன்தாய் மொழியில்
தேசிய கீதம் இசைக்கும்.
த.யாளன்