விடியலுக்காய் காத்திருக்கும்
தேசம்……….
நேற்றுவரை நாம் இருந்த
வீடிலழந்து நிலமிழந்து
நாதியற்று நிர்க்கதியாய்
நாற்திசையும் நாம் அலைந்தோம்
விடியலைத் தேடியே
முள்ளிடை வேலிக்குள்
முழுவதும் அடிமையாகி
ஒடுங்கியே போனோம்
இது காலமிட்ட சாபமோ?
யார் செய்த பாவமோ?
நாம் அறியோம்
எம் சாபங்கள் நீங்கிட
விமோசனம் ஏதுமுண்டோ
இறைவா நீ சொல்!
காலங்கள் நாளை மலர்ந்திடுமோ
கண்ணீரின் கோடுகள் மறைந்திடுமோ
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
வலிகள் சுமந்து வாழ்கிறோம்
விடியல் வரும் என்ற தீராத தாகத்துடன்
எங்களின் விடியலை நோக்கிய படி
செய்யாத ஒப்புதற்க்காய்
விலங்கிட்டு சிறைபட்டு
வீண்பழி சுமக்கிறோம்
விடியல் வருமென்றே
கம்பிக் கூண்டுக்குள்ளே
எம் கனவுகள் கரைய
கண்ணீரிலே காலங்கள் கரைகிறது
சுததந்திரக் காற்றை எண்ணிய படியே
எம் விழியில் சொரியும் அருவிகள்
உங்கள் இமைகளை நனைத்திடாதா
மனிதநேயங்கள் மலர்ந்தே
மனச்சாட்சியின் கதவுகள் திந்திடாதா
எம் தேசம் விடுதலை அடைகின்ற இனிய நாளும் வந்திடாதா
காத்திருக்கிறோம்………..
எம் தேசத்தின் உதயத்தைக் காண.
படைப்பு : நாகதேவன் தமிழீழம்.