அடித்த கை அணைத்திடில் வலி போகுமா…!
தாயுக்கு பொருந்திடும் தகைமை எல்லாம்
தமிழுக்கும் பொருந்தும் அதுவும் உண்மை
சேயுக்கு அன்னைதன் கடிதல் எல்லாம்
அடித்த பின் அணைத்திடில் அதுவும் நன்மை
வாயுக்கு வந்ததை தாழ்த்திப் பின்னர்
நடித்ததும் வசைகளின் பழி போகுமா
நாயுக்கு கீழாய் நடத்திப் பின்னும்
அடித்த கை அணைத்திடில் வலி போகுமா
பிணத்தினைப் புணர்தலை கண்ட பின்னும்
குணத்தினை மாற்றலாம் குவியும் என்றீர்
ரணத்தினை எப்பிடித் துயிலுரித்தீர் எங்கள்
இனத்தினை இப்படிக் கருவறுத்தீர்
விலைகளைக் கொடுத்தது விம்மவில்லை
தலைகளைக் கொடுத்தது தயங்கவில்லை
உலைகளை கண்டுமே உறங்கவில்லை
மலைகளாய் நின்றுமேன் மடியவில்லை
வேலிகள் அமைத்தது வேகம் கொள்ள
தாலிகள் கொடுத்தது தாகம் வெல்ல
சோலிகள் முடிப்போம் தேசம் அள்ளப
போலிகள் தகர்த்தபின் மண் உறங்க
மாதவம் செய்திட ஆசை என்றால்
மரணத்தை மண்ணுக்கே மகிழ்ந்து கொடு
யாசகம் பெறுவதே நோக்கு என்றால்
சரணத்தை பிடித்தவன் அருகில் இரு.
…..கவிப்புயல் சரண்…….