மீண்டும் பிறப்பேன் விடுதலைக்கு போரிடுவேன்!
(தமிழீழ மாணவர் எழுச்சி நாள் 2020)
உலகமே சாயினும் மானமே
பேணிடும் ஈழக்குடியின் முதற் தற்கொடையாளன்
அடிமயாய் கிடந்தது போதுமென
அன்னியனுக்கு அடங்க மறுத்து
தன் உயிரை தற்கொடை தந்து
ஆயுத போராட்டத்திற்கு அடித்தளமிட்டவன்
சாவே அணைத்தாலும் கொள்கையில்
பின் வாங்கமாட்டேன் என திமிறியவன்
நான் சாகலாம் தமிழ் சாக விடலாகுமோ என
ஈழவனின் சிவமாகி நின்றவன்
எதிரியை விட கொடியது துரோகமே
என்று உணர்ந்து களமுனை தேடி
மீண்டும் பிறப்பேன்
விடுதலைக்கு போரிடுவேன் என
தமிழின் பொன்னாகி
தமிழின் ஆயுதமாகி
தமிழின் சிவமாகி
தமிழின் மாவீரனாகி
துரோகத்தால் வீழ்ந்தான்
முதல் தற்கொடையாளனாக
தூரோகம் வீழ்த்திய களம் தனில்
துரோகத்தின் கதை முடித்து
வீரத்தின் வாழ்வுதனை துரோகம் கவ்வும்
எனினும் வீரமே வெல்லும் என
போர் பறை சாற்றி
தமிழின் இயங்கு திசையாய்
அவதரித்தான் கரிகாலன் எனும்
ஈழத்து சூரியனாய்…!
ஈழம் புகழ் மாறன்