சர்வதேசமே கொஞ்சம் திரும்பிப்பார்..!
சர்வதேச நாடுகளின்
சூழ்ச்சியால்
ஆண்ட தமிழினம்
அடியோடு அழிந்து போக,
எஞ்சியவரை அகதியாய்
அலைய,
ஆறாதா வடுக்களோடு
காத்திருக்கின்றோம்..
விடியலுக்காக…
விடுதலைக்காய்…
புகலிடம் என்று -.நாம்
ஒதுங்கிய இடமெல்லாம்
மரணக் குழிகளாகவே
நமக்காய் அமைந்தது..
இழப்பின் துயரமும்
அடிமை வாழ்வின் அவலமும்
நிழல் போலவே
நம்மைத் தொடர..
மீண்டும்
அகிம்சை வழியில்
அறப்போரை தன்
ஒற்றை ஜீவனில்
அடக்கும் முயற்சியில்
பசித்திருக்கின்றார்
அன்னை அம்பிகை..
ஆகாரமின்றி
அகிம்சை வழி நின்று
உயிர் உருக உருக
இனவிடுதலையை பசித்திருக்கும்
அன்னையின் பசிக்கு..
அவர்தம் கேரிக்கையை நிறைப்பார்களா..?
இல்லை
இறப்பை இறைப்பார்களா..?
யார் மீதம்மா உமக்கு நம்பிக்கை..?
தமிழின விடுதலையை
பசித்திருந்த பார்த்தீபனும்
அன்னை பூபதியும்
வஞ்சகத்தால் வாட வைத்து
சகடித்த உலகமம்மா..
விடுதலைத் தீயினைச் சுமந்து
அன்னை மண் விட்டு
அடி வயிற்றில் பசி சுமந்து
நீதி கேட்டு
தொடரும் நம் வாழ்வில்
நீதி தான் கிடைக்குமா..?
சர்வதேசமே கொஞ்சம் திரும்பிப்பார்..!
சங்கரி சிவகணேசன்