வீரியம் கொண்ட வாழ்வு.....!
ஆயிரம் அணுக்கள் கோடி
அலையென வந்தும் அன்று
வீரியம் உள்ள மட்டும்
அன்னையின் கரு என்றாச்சு
பிறப்பிலே பிழைகள் இன்றி
பிரித்தலை பிழைப்பாய் கொண்டு
விடுதலை உணர்வில் அந்த
கருவிலே குழந்தை வாழும்
பிறந்ததும் அழுகை என்றால்
பிறப்பிலே எழுச்சி உண்டு
சிறந்தஓர் உதாரணமாய்
சிசுவிலே நிகழ்ந்ததுண்டு
வாழ்தலின் அர்த்தம் தன்னில்
வரை முறை கோடி உண்டு
ஆணுக்கு பெண்ணும் ஒன்று
பெண்ணுக்கு ஆணும் ஒன்று
வரம்பினை மீறி என்றும்
வாழ்தலே பிழையென்றாகும்
நரம்பினை அறுத்த போதும்
நம் புகழ் ஒங்க வேண்டும்
சாலையின் ஓரம் நின்று
சத்தங்கள் போடுவதால்
சாதனை ஏதும் இல்லை
வேதனை என்னவென்றால்
வீழ்ந்தது இளைய பிள்ளை
காலையில் கல்வி கூடம்
மாலையில் கஞ்சாப் பீடம்
கூடுவோர் கூடியதால்
குலைந்தது தமிழன் மாண்பு
பகைமைகள் பசுமை அல்ல
பகைக் குலம் வீழ வேண்டும்
பகைவரை பகைக்க எண்ணில்
படிப்பினால் பகைத்து கொள்ளு
வாளுடன் ஈட்டி எங்கள்
பாட்டியின் வீர சொத்து
இன்று ஏன் அதனை ஏந்தி
எரிக்கிறாய் உடன் பிறப்பை
புதுமைகள் செய்ய எண்ணும்
மனமது புனிதம் ஆகும்
வினவினால் வேள்வி எல்லாம்
வேகத்தின் யாகம் ஆகும்
புரிந்து கொள் புறப்படு என்றும்
புனிதத்து வேள்வி காண
இறப்புக்கு முன்னர் உந்தன்
இருப்பினை நாட்டி விடு..
..கவிப்புயல் சரண்..
Share this: