எங்கள் பேரழகிகள்!
சிங்காரங்கள் தவிர்த்து நின்று
போர்க்களத்தில் சீறிச் சென்று
பொட்டழித்து, மை தவிர்த்து கருங்கூந்தல்
கத்தரித்து வரி தரித்து வலுச் சேர்த்து புலியாக
நடந்து சென்று செருக்களத்தில் ஆடி நின்ற எங்கள்
புலிப் பெண்களின் பேரழகைச் சொல்லி நிற்க
எங்கேணும் வார்த்தையுண்டோ?
-தமிழீழன்-